/* */

வாழும் வரை போராடு.... வாழ்க்கைக்கான நல்ல அறிவுரைகள் இனிய தமிழில்....படியுங்க

Life Advice Quotes in Tamil-வாழ்க்கையானது வாழ்வதற்கே. இக்கால இளைய தலைமுறையினருக்கு பிடிக்காத வார்த்தை என்ன தெரியுமா? அட்வைஸ். வாழ்க்கைக்கான அட்வைஸ் என்ன பார்ப்போம்.

HIGHLIGHTS


Life Advice Quotes in Tamil-மனித வாழ்க்கை என்பது மகத்தானது.ஒ வ்வொரு நாளும் ஒவ்வொரு புது அனுபவத்தினை நாம் கற்று உணர்கிறோம். ஒருசில செயலைச்செய்யும்போது நம்மை விட வயதில் மூத்த அனுபவ சாலிகளிடம் ஒரு சில கருத்துகளை கேட்டு செய்வதில் கொஞ்சம் கூட தவறில்லை. ஏனெனில் வயதானவர்கள் வயதில் மட்டும் மூத்தவர்கள் அல்ல. அவர்களுடைய அனுபவமும் மூத்தது என்பதால் அதில் நமக்கு பலன்கள் ஆயிரம் இருக்கும்.

ஆனால் இக்கால இளைய தலைமுறையினருக்கோ பெற்றெடுத்த அப்பா, அம்மா அறிவுரை சொன்னா பிடிப்பதில்லை. மற்றவர்களிடம் இவர்கள் கருத்து கேட்கவா போகிறார்கள். அறிவுரைகள் யார் சொன்னாலும் அதில் நல்ல கருத்துகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டியது நம் கடமை ஆகும்.

பல காயங்களுக்கு கண்ணீர் மருந்துசில காயங்களுக்கு பிரிவு மருந்துஎல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்துஅமைதி...

இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்அடுத்தவர்களை பாராட்டும்போது அவர்களின் மனமும்குளிரும் நம் மனதிலுள்ளபொறாமை குணமும் அழியும்

சபதங்களும்சவால்களும் காற்றில் பறக்கும்வார்த்தைகளாகஇருக்க கூடாது

ஓலை குடிசையில்பிறந்தான் மகன்கோடீஸ்வரன்என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை

போராடி வாழ்வதற்கு வாழ்க்கைஒன்றும் போர்க்களமல்ல அதுபூ வனம் ....ரசித்து வாழ்வோம்....

அரசியலை போல்தான் வாழ்க்கையும்பல எதிர்பார்ப்புகளைகொடுத்து ஏமாற்றுவதில்...

மொத்த பிடிவாதத்தையும்உடைக்கும் வலிமைபிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு...

அழ நினைத்தால் ஆசைதீரஅழுதுவிடு கண்ணீரின் முடிவில்சுமைகளும் கரையுமென்றால்...

சகித்துக்கொண்டு வாழ்வதல்லவாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...

அடிக்கடி கண்ணீர் விட்டால்உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது...

கடந்து போன நாட்களில்உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடுஇனி கடக்கபோகும் நாட்களில்அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்...

காத்திருக்கும் பொறுமைநமக்கிருந்தாலும்காலத்துக்கு இல்லை...

மனமும் கண்ணாடியைபோல்தான்உடையும்வரை யாரையும்காயப்படுத்துவதில்லை...

இளமையில் உன் சேமிப்பு மட்டுமேமுதுமையில் உனக்கு கைகொடுக்கும்அடுத்தவர் கையை நம்பி வாழும்வாழ்க்கை நரகம்...

நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்நம் தவறுகளைநாம் உணரபோவதில்லை...

குறைகள் இருப்பது இயல்பு அதைமதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு

( கீதை)

மனம் விசித்திரமானது கிடைத்ததைநினைத்து நிறைவடையாது கிடைக்காததைநினைத்து தவிக்கும்...

இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்...

அம்பினால்பட்ட காயம் ஆறும்அன்பினால்பட்டகாயம் ஆறாது

life advice quotes in tamil

தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லைஎது நடக்குமோ அது நடந்தே ஆகும்...

யாருக்காகவும் காத்திருக்காதே நீ காத்திருப்பதால்உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை...

இதயத்தில் குறையிருந்தால்சரிசெய்ய பல வைத்தியர்கள்உன் மனக்குறைக்குநீ மட்டுமே வைத்தியர்...

வானவில் வாழ்க்கையில்மின்னலை போல்வந்து போகும் கனவுகள்

கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்வைரக்கல் மங்கி விடுவதில்லை...

எண்ணங்கள் அழகானால்வாழ்க்கையும் அழகாகும்...

இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்என்ற குழப்பம் இல்லாதவர்களுக்குஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை...

நம் பயம் எதிரிக்கு தைரியம்நம் அமைதி அவனுக்கு குழப்பம்குழப்பத்தில் இருப்பவன்எப்போதும் ஜெயித்ததில்லை...

இழந்ததை மறந்து விடுஇருப்பதை இழக்காமல் இருக்க

சில இழப்புக்கள் வலியை தருகின்றதுசில இழப்புக்கள் வலிமையை தருகின்றது

புரியாத கவிதையும்கலையாத கனவும்அழகு தான்...

life advice quotes in tamil

தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்உள்ளங்கள் சுருங்காமல்ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துவாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்ஓர் அழகிய காதல்வாழ்ந்துக்கொண்டிருக்கு...

அவமானத்தின் வலிஅழகிய வாழ்க்கைக்கான வழி...

விளையாட்டாகஎடுத்துக்கொள்ளும்விசயங்களில் தான்அதிக. தோல்விகளைசந்திக்கின்றோம்...

ஒளியை கண்டால்ஓடிவரும் நிழல்இருளிலும் உடனிருக்கும் நிஜம்...

மனம் அழகானால்வாழ்க்கையும் பூவனமாகும்...

வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை...

தோல்வி உன்னைவீழ்த்தும் போதெல்லாம்குழந்தையாகவே விழுமீண்டும் மீண்டும் எழுந்து நடக்க...

நம்பிக்கையா இருங்கஆனால் ஒருவருக்கு தெரியாமல்இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க...

கல்லூரியிலும் கற்றுக்கொள்ள முடியாதவாழ்க்கை பாடத்தைசில இழப்புகள் கற்றுத்தருது...

கவலைகள் எல்லாம்கனவைப்போல்கலைந்துப்போகவேண்டுமென்பதேஅனைவரின் கனவு

நம் தேடல்களில் ....பல தேவையற்றவையே

கோபப்படவும் யோசித்ததில்லைகோபம் தனிந்த பின்பு தானாக பேசவும்தயங்கியதும் இல்லைஅன்னையின் அன்பில் மட்டும்...

காரணமில்லாமல் வரும்கோபங்கள் நம் வளர்ச்சியைதடுப்பதோடு மட்டும் இல்லாமல்நெஞ்சத்தில் வஞ்சகங்களையும்

அதிகரிக்க செய்துவிடும்...

life advice quotes in tamil

நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட...நேரத்திற்கு தகுந்தாற்போல்வாழ்பவர்களே நிம்மதியாய்வாழ்கிறார்கள்...

நீ சுயமாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்ததைஎல்லோரும் விரும்புகிறார்களா இல்லைவெறுக்கிறார்களா என நினைத்து

ஒரு போதும் ஒரு போதும் கவலைப்பட தேவையில்லை...

காயங்கள் ஆற மாறஉன் மனமாற்றத்தால் மட்டுமே முடியும்...

உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட..அவர்களை பாராமல் இருந்து பார்...உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்...!

உன் தேடல்களும்எதிர்பார்ப்புகளும்நியாயமானதாக இருந்தால்நிச்சயம் உன்னை வந்தடையும் வந்தடைந்திருக்கும்...

வாழ்க்கை பாடத்தைகற்றுக்கொள்ள...அம்மா அப்பா கடந்துவந்த பாதையை அறிந்துகொண்டாலே போதும்...

தவறுகள் மட்டும் தண்டனைக்குரிய குற்றம் அல்லநேசிக்கும் மனதை அலட்சியம் செய்வதும்அலைக்கழிப்பதும் கூட

தண்டனைக்குரிய குற்றம் தான்...

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட...அதிக புரிதல் இருப்பதேசிறந்தது...எதையும்ஏற்றுக்கொள்ளும் போதுமனம் இலகுவாகிறது

உடைந்த கண்ணாடி போல்ஒட்டவைக்க முடிந்தும்முடியாமல் போகிறது சில உறவுகளை...

அனைத்துக்கும் காரணம்தேடிக்கொண்டிருந்தால்வாழ்க்கையை ரசிக்கமுடியாது

அதிக உரிமைஎடுக்காதேகொடுக்காதேஒருநாள்வெறுப்பாய் வெறுக்கபடுவாய்...

நம் கண்ணீரை நம் கையேதுடைத்துக்கொள்ளும்போதுமனம் தெளிவான முடிவுக்குவந்துவிடுகின்றது....

நான்ரசித்தமுதல் இசைதந்தையின்இதயத்துடிப்பு...

உழைப்பிருந்தால் தான்வீட்டிலும் உனக்கு மதிப்பிருக்கும்..பிடித்தவர்களின்நிராகரிப்பும் அலட்சியமும்வலியை கொடுத்தாலும்அழகிய வாழ்க்கைக்கானவழியையும் காட்டுகிறது....

இன்பமோ துன்பமோஅனுபவிக்கபோவது நீ ..எனவேமுடிவும் உனதாகட்டும்

பாசம் இருக்குமிடத்தில்அதிகாரம் இருப்பதில்லைஅதிகாரமிருக்கும் இடத்தில்அன்பு நிலைப்பதில்லை...

நீர்க்குமிழியை போல்வாழ்க்கை......மறைவதற்குள்ரசித்திடுவோம்

இன்று மனதிற்குவலிகொடுத்த நிகழ்வுகளைஎல்லாம் இருளோடு கரைத்திடுவோம்...

ஜெயிக்கும் வரையில்தன்னம்பிக்கை அவசியம்,ஜெயித்த பிறகுதன்னடக்கம் அவசியம்.!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 March 2024 9:55 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...