/* */

தாலிக்கயிற்றில் என்னை முடிந்துகொண்டவன்..! என்னவன்..அவனே என் மன்னவன்..!

Best Husband Quotes Tamil-என் நெற்றிப்பொட்டுக்கு சொந்தக்காரன். என் இறப்பு வரையிலும் என் கூட வரும் மூன்றாம் கால் அவன்தான்.

HIGHLIGHTS

Best Husband Quotes Tamil
X

Best Husband Quotes Tamil

Best Husband Quotes Tamil-கணவன்,மனைவி பந்தம் என்பது காதலால் எழும் உள்ளத்தை அளவிட்டு கூறிவிடமுடியாது. அது இருவருக்குள்ளும் ஒளியேற்றும் தீபம்போல உள்ளுக்குள் ஒளியேற்றும். அதன் ஒளிப்பிரவாகம்தான் அன்பின் வெளிப்பாடாய், தலைமுறைகளை தொப்புள்கொடியில் பிணைக்கும் பந்தமாகும்.

  • உன்னைத் தவிர வேற யாரையும் என்னால நெனச்சு பார்க்க முடியாது. அதே மாதிரி, உன்ன எப்போவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் என்னால முடியாதுடா..
  • உந்தன் நெற்றி மீது ஒற்றை முத்தமிட்டு எனக்கானவன் நீதான் என முத்திரை பதித்திட ஆசையடா...
  • மயிலிறகாய் என் மனம் வருடி மலர்கின்றாய், என் மன்னவனே.. பகல் நிலவாய் என் பாதையில் ஒளிர்கின்றாய் என்னவனே.. நிழற்குடையாய் நீ நிற்க ஏங்குகிறேன் என்னுயிரே.. நிழல் படமாய் நானிருக்க நேரமென்ன என் மாயவனே?
  • ஒரு வண்ணத்துப்பூச்சி என்னிடம் வந்து கேட்டது, உன் காதலன் என்ன ஓவியமா என்று..? அதற்கு நான் சொன்னேன், இல்லை அவன் என் உயிரின் காவியம் என்று...!
  • அழகானவன் அல்ல... எனக்கு மட்டும் அழகாய் தெரிபவன்.. அவன் அன்பினால் அழகானவன்..!
  • நெற்றியில் இருக்கும் சிவப்புப் பொட்டு நீ.. என் பெண்மைக்கு நீ தந்த பரிசல்லவோ.. கணவனே என் ஆருயிர் காதலனே..
  • வணங்குவது எந்தன் கை என்றாலும், வேண்டுதல் என்னவோ, என்னவனுக்கே..
  • அவனின் அணைப்பின் கதகதப்பில், அதிகாலை குளிரும் சற்றே, அடங்கித்தான் போகிறது..
  • குடையால் தடுக்க முடியவில்லை..எனக்குள் பெய்யும் மழை..ஆமாம் அவனின் அன்பால் முழுவதும் நனைந்து, தோய்ந்து, மெதுவாய் கரைகிறேன்..அவனுக்குள்..!
  • பாசத்தைப் பொழிய பலர் இருப்பினும், மனம் களைப்பாகும் போது, என்னவோ.. இளைப்பாற தேடுவது என்னவோ உன் மடியைத்தானடா..
  • அழகான நினைவு நீ..அன்றலர்ந்த நிலவு நீ.. கலையாத கனவு நீ..என்னை கொள்ளையடித்த கள்வன் நீ..! புரிந்துகொள்ள முடியாத உணர்வும் நீ..எனக்குள் இருந்து பிரிக்கமுடியா உறவும் நீ..என் உயிரோடு கலந்த எல்லாமும் நீயே..
  • களிப்பு மிகுதியில் காதல் கசிந்து உன் கன்னம் கடிக்க ஆசையடா.. கன்னங்களைத் தா.. காதல் சுவடொன்று பதிக்க..
  • என் இதயத்தில் நீ குடியிருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. ஆனால், முன்பணமாக ஒரு முத்தமும், வாடகையாக ஒரு பார்வை நித்தமும் வீசிப் போ..நான் வாழ்ந்து போவேனடா..
  • திக்கு முக்காடி போனேனடா.. உன் பரவச அணைப்பில்..உன் அன்பின் மிகுதியால் அளவில்லா காதலின் வெகுமதியாய் உனக்கு நானும்; எனக்கு நீயும்..
  • அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாமடா..ஏனோ, எனக்கு அமிழ்தமாகவே தெரிகிறது அவன் முத்தம்..அளவுக்கு மிஞ்சினாலும்...
  • விழுதுகள் மரத்தை தாங்கலாம். வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும். எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கு மனைவி தான் ஒப்பற்ற துணை. ஒரு பெண்ணுக்கு கணவன் தான் ஈடு இணையற்ற துணை. அதற்கு இணை வேறு எதுவும் இல்லை.
  • நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ. இப்போது வரமாக கேட்கிறேன்..உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று.
  • நீ இல்லாத நேரங்களில் கூட உன் நினைவுகளிலும் உன் முத்தச் சத்தம் என்னை இம்சிக்கிறதடா..
  • எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன். விட்டுச் செல்லவும் மாட்டேன் என்று இருக்கும் ஒரு ஆண்.
  • உயிர் மெய் எழுத்துக்களால் நிறைந்திருக்கும் எனது கவிதைகள் மட்டும் உனக்கு இல்லை. அதில் கலந்திருக்கும் உயிரும் உனக்கானது தான்.
  • தன் மனைவியின் கோபத்தையும் பிடிவாதத்தையும் புரிந்து கொள்ளும் எந்த ஒரு ஆண் மகனும் தனது மனைவி கண்ணீர் சிந்துவதை விரும்புவதில்லை.
  • நானும் நீயும் கணவன் மனைவியாக வாழ இந்த காதல் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
  • எவ்வளவு பெரிய துன்பத்தையும் ஒரே ஒரு புன்னகையால் விழுங்கி விடுவாய்.
  • கணவன் பணக்காரனாக இல்லை என்றாலும் பரவாயில்லை. கடன் காரனாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் நீதானடி உண்மையான மனைவி.
  • என் இதயம் இருப்பது என்னவோ.. எனக்குள் தான் இருக்கிறது..! ஆனால் அது துடிப்பதென்னவோ உனக்காக மட்டும் தான்.
  • கணவன்-மனைவி காதல் என்பது கட்டிப் பிடிப்பதிலும், முத்தம் கொடுப்பதிலும் மட்டும் இல்லை. தன்னோடு வாழ்பவரின் வலியையும், உணர்வையும் புரிந்து வாழ்வதில்தான் இருக்கிறது.
  • எனக்கான சிறிய உலகத்தில் நான் தேடிக்கொண்ட கொண்ட மிகப் பெரிய உறவு நீ..நீண்டு பயணம் செய்ய..!
  • நாம் ஒருவரை நேசிக்கும் போது நம் முகம் அழகாய் தெரியும்..! நம்மை ஒருவர் நேசிக்கும் போது இந்த உலகமே பேரழகாய் தெரியும்.
  • கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என் ஆயுள் முடியும் வரை உன்னை காதலிப்பேனடா..!
  • தினமும் துயிலெழுந்து உனக்காகவே முகம் பார்க்கிறேன். உன்னால் நான் அழகுபெறுவதை ரசிப்பதற்காக..!
  • தினமும் துயிலெழுந்து முகம் பார்க்கையில், நீ என்னுடையவனா என்று என்னைக் கிள்ளிக்கொள்கிறேன்..இன்னும் என்னால் நம்ப முடியவில்லை, நீ எனக்கானவன் என்று..!
  • கோபப்படுங்க..திட்டுங்க..ஆனா அடித்துவிடாதீர்கள். ஏனெனில் வலிப்பது உங்களுக்காகத்தான் இருக்கும். மனைவியைத்தாங்கும் கணவர்களுக்கு..
  • எப்போது சண்டையைத் தொடங்குவாய் என்று காத்திருக்கிறேனடா..ஏனெனில் உன் சமாதான ஊடலை நான் ரசிக்கவேண்டுமல்லவா..?!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 March 2024 9:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?