/* */

காவிரி-பெண்ணாறு உள்பட 5 நதிகள் இணைப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில், 2022- 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். பல்வேறு அறிவிப்புகளை, அவர் வெளியிட்டு வருகிறார்.

HIGHLIGHTS

காவிரி-பெண்ணாறு உள்பட 5 நதிகள் இணைப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
X

அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.இதைத் தொடர்ந்து, 2022- 23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தாக்கல் செய்து, உரையாற்றி வருகிறார். அவரது பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

  • கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நாட்டில் பொருளாதாரம் முன்னேற்றி வருகிறது. தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், கொரோனா பரவல் குறைந்துள்ளது.
  • ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. அடுத்த 25, ஆண்டுகளின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில், அதை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.27,சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்ற முக்கியத்துவம் தரப்படும்.
  • மேக் இன் இந்தியா என்ற சுய சார்பு திட்டத்தின் மூலம் 60, லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • நாடு முழுவதும் 22, ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு ரயில்வே கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் வந்தே பாரத் திட்டத்தில், 400, ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.
  • உள்ளூர் வணிகம் மேம்பட ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற அடிப்படையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • போக்குவாத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும்
  • நாடு முழுவதும் 25000,கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்.
  • இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். விவசாயப்பணிகளுக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படும். நிலங்களை அளப்பதற்கு டிரோன் கிசான் அறிமுகம் செய்யப்படும்.
  • எண்ணெய் வித்துகள், சிறு தானிய உற்பத்திக்கு அரசு முக்கியத்துவம் தரும்.
  • ரூ.44,000, கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். காவிரி- பெண்ணாறு உள்ளிட்ட ஐந்து நதிகளின் இணைப்புக்கு திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
Updated On: 3 Feb 2022 7:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  3. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  4. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  5. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  6. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  7. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  8. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  9. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!