/* */

புதிய வகை கொரோனா தொற்று குறித்து பயப்பட தேவையில்லை: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து பயப்பட தேவையில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

புதிய வகை கொரோனா தொற்று குறித்து பயப்பட தேவையில்லை: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்
X

இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதுவகை கொரோனா குறித்து எந்தக் கவலையும் தேவையில்லை. அது ஒரு துணை மாறுபாடு தொற்று. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியர்களை சோதனை செய்தபோது இது கண்டறியப்பட்டது. கேரளத்தின் சுகாதார அமைப்பு மிகவும் நன்றாக இருப்பதால், மரபணு பகுப்பாய்வு மூலம் அதைக் கண்டறிய முடியும். எனவே மக்கள் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இருந்தாலும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறி உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

ஐரோப்பிய நாடான லக்ஸெம்பா்கில் சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட ‘ஜெஎன்.1’ வகை கொரோனா, பிஏ.2.86 வகையின் திரிபாகும். இப்போது பல்வேறு நாடுகளில் இப்புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ‘ஜெஎன்.1’ வகையானது வேகமாகப் பரவும் என்பதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமெனக் கூறப்படுவதால், கொரோனா தொடா்பான முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த அக்டோபா் 25ம் தேதி சென்ற ஒருவருக்கு அங்கு ஜெஎன்.1 வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், திருச்சியிலோ அல்லது தமிழகத்தின் இதர பகுதிகளிலோ கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. இந்தச் சூழலில், கேரளத்தில் 79 வயது பெண்ணுக்கு ஜெஎன்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

காய்ச்சல், இருமல் போன்ற மிதமான அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி ஆா்டி-பிசிஆா் சோதனை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அவரின் மாதிரிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதில், ஜெஎன்.1 வகை தொற்று கடந்த டிச.8-ஆம் தேதி கண்டறியப்பட்டது.

தற்போது நாட்டில் பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 90 சதவீதம் மிதமானதாகவே உள்ளது. இதற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே போதுமானது. கேரளப் பெண்ணுக்கு ‘ஜெஎன்.1’ தொற்று உறுதியான நிலையில், நாட்டில் வேறெங்கும் இப்புதிய வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On: 2 Jan 2024 10:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்