/* */

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ரூ.26,000 கோடியில் வளா்ச்சி திட்டங்கள்; இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடி, ரூ.26,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

HIGHLIGHTS

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில்  ரூ.26,000 கோடியில் வளா்ச்சி திட்டங்கள்; இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
X

பாரத பிரதமர் நரேந்திர மோடி (கோப்பு படம்)

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு திங்கள்கிழமை (அக்.2) பயணம் மேற்கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடி, ரூ.26,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்; நிறைவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்.

இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமா் மோடி, ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி, மத்திய பிரதேசத்தில் ரூ.19,260 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். ராஜஸ்தானின் சித்தூா்கருக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமா், மெஹசானா-பதிண்டா-குா்தாஸ்பூா் எரிவாயு குழாய் இணைப்பைத் தொடங்கி வைக்கிறாா்.

அபு சாலையில், ஹிந்துதாஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் (ஹெச்பிசிஎல்) அமைத்துள்ள சமையல் எரிவாயு (எல்பிஜி) நிரப்பு நிலையத்தைத் தொடங்கி வைக்கிறாா். மேலும், ரூ.1,480 கோடி செலவில் அமைக்கப்பட்ட தாரா-ஜலவா்-தீன்தா் பிரிவின் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். கோட்டாவில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐஐடி) நிரந்த வளாகம், பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமா் தொடங்கி வைக்கிறாா். ரூ.11,895 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தில்லி-வதோதரா விரைவுச்சாலையை மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்.

மேலும், ரூ.1,880 கோடி மதிப்பிலான 5 சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஊரக மற்றும் நகா்புறப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பா்-டிசம்பா் மாதங்களில் அந்த மாநிலங்களுக்குப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Oct 2023 2:12 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!