/* */

கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு தொடருமாம்: அதிர்ச்சித்தரும் சீரம் அதிகாரி

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு சில மாதங்களுக்கு தொடரலாம் என்று சீரம் தலைமை நிர்வாக அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு தொடருமாம்: அதிர்ச்சித்தரும் சீரம் அதிகாரி
X

சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 3 லட்சத்தைத் தாண்டி எண்ணிக்கை மிரட்டி வருகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு தொடரலாம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தும் அளவுக்கு தேவையான தடுப்பூசிகள் இன்னும் வந்தடையவில்லை என்று தமிழகம் உட்பட பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் பல மாநிலங்கள் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்துள்ளன.

இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில், இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடரும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Updated On: 3 May 2021 9:41 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...