/* */

Post Office Savings Scheme in Tamil-அஞ்சலக சேமிப்பு திட்ட வகைகள்..!

பொதுவாகவே வங்கி சேவைகள் பரவலாக்கப்படுவதற்கு முன்னர் அஞ்சலக சேமிப்பு கணக்குகள் அல்லது அஞ்சலகத்தில் சேமிப்பு வைத்திருந்தோர் அதிகம்.

HIGHLIGHTS

Post Office Savings Scheme in Tamil-அஞ்சலக சேமிப்பு திட்ட வகைகள்..!
X

Post Office Savings Scheme in Tamil

வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம். அப்படி, மாதந்தோறும் செலவுகள் இருப்பதை போலவே, கொஞ்சம் நிதி சேமிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களாக இருந்தால்,அவர்களுக்கு ஏற்ற சிறு சேமிப்பு திட்டங்கள் தபால் துறையில் இருக்கிறது.

அஞ்சலகத்தில் சேமிக்கும் திட்டங்கள் மற்றும் அதன் நன்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

Post Office Savings Scheme in Tamil

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு (Post Office Savings Account)

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அல்லது மூத்த குடிமக்கள் இந்த சேமிப்பு கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் 10 வயதுடைய மைனர் எனில் அவர்களுக்கு பாதுகாவலர் இருக்க வேண்டும். பாதுகாவலர் மட்டுமே அதை நிர்வகிக்க முடியும்.

​​இந்தக் கணக்கிற்கு ஆண்டுக்கு 4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி மற்றும் கடைசி நாளின் குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். இந்தக் காலக்கட்டத்தில், மீதித் தொகை ரூ.500க்குக் குறைவாக இருந்தால், வட்டி எதுவும் வரவு வைக்கப்படாது என்று தபால் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், கணக்கு இருப்பு குறைந்தபட்சம் ரூ. 500 ஆக இருக்க வேண்டும், இல்லையென்றால் கணக்கு பராமரிப்பு கட்டணமாக ரூ. 50 எடுக்கப்படும். கணக்கு இருப்பு பூஜ்ஜியமாக மாறினால் கணக்கு தானாகவே மூடப்படும்.

முடங்கிய கணக்கு:

ஒரு சேமிப்பு கணக்கில் தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளுக்கு எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றால், அது முடங்கியதாக அல்லது செயலற்றதாகக் கருதப்படும். சேமிப்பு கணக்கை மீண்டும் திறக்க,(KYC) ஆவணங்கள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக் ஆகியவற்றுடன் ஒருவர் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கில் காசோலை புத்தகம், ஏடிஎம் கார்டு, நெட் பேங்கிங்/மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கின்றன.

Post Office Savings Scheme in Tamil

நேர வைப்பு திட்டம் (Post Office Time Deposit Account (TD))

அஞ்சலகத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் இரட்டிப்பாக்க விரும்பினால், நேர வைப்புத் திட்டத்தின் விருப்பம் இதற்கு நல்லது. முதல் ஆண்டு 6.8% -மும் இரண்டாம் ஆண்டு நேர வைப்புகளுக்கு ஆண்டுதோறும் 6.9 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், பணம் சுமார் 13 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இது தவிர, 5 வருட கால வைப்புத்தொகைக்கு 7.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும், இதில் உங்கள் பணம் சுமார் 10 வருடங்கள் மற்றும் 8 மாதங்களில் இரட்டிப்பாகும்.

போஸ்ட் ஆஃபீஸ் மாதாந்திர வருவாய் திட்டம் (POMIS) ஏன் அவசியம். அதன் பலன் என்ன? எப்படி இத்திட்டத்தில் இணையலாம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

Post Office Savings Scheme in Tamil

போஸ்ட் ஆஃபீஸ் மாதாந்திர வருவாய் திட்டம் (POMIS) என்றால் என்ன?

போஸ்ட் ஆஃபீஸ் மாதாந்திர வருவாய் திட்டம் (POMIS) என்பது நிதியமைச்சகத்தின் நேரடிப் பார்வையின் கீழ் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த சேமிப்புத் திட்டம். இதில் ஒருவர் ரூ.9 லட்சம் வரை தனியாகவும், ரூ.15 லட்சம் வரை கூட்டாகவும் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம். இத்திட்டத்தின் கீழான சேமிப்புகளுக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி மாதந்தோறும் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. உதாரணத்துக்கு நீங்கள் ரூ.4.5 லட்சம் தொகையை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ.2,475 வட்டியாகக் கிடைக்கும்.

18 வயதை தாண்டியவராக இருக்க வேண்டும். உங்கள் மைனர் வாரிசின் பெயரிலும் ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்கள் அந்தப் பணத்தை 18 வயது பூர்த்தியான பின்னரே பெற முடியும். ஓராண்டுக்கு முன்னரே பணத்தை எடுத்தால் எந்த பலனும் இருக்காது. 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் எடுத்தால் செலுத்திய தொகையில் 2% அபராதமாகப் பிடிக்கப்படும். 3 முதல் 5 ஆண்டுகளில் திரும்பப் பெற்றால் மொத்த பணத்தில் 1% அபராதம் பிடிக்கப்படும்.

Post Office Savings Scheme in Tamil

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS))

அஞ்சலகத்தின் இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 8.2% சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதன் கீழ், உங்கள் பணம் சுமார் 9 வருடங்கள் மற்றும் 7 மாதங்களில் இரட்டிப்பாகிறது. அஞ்சலக சேமிப்புகளில் அதிக வட்டியுடைய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. 30 லட்சம் வரை இந்த திட்டத்தில் அதிகபட்ச சேமிப்பு தொகையாகும்.

Post Office Savings Scheme in Tamil

பொது வருங்கால வைப்பு நிதி (15-year Public Provident Fund Account (PPF))

PPF இல், 7.1 சதவீத வட்டி ஆண்டுதோறும் கிடைக்கும், இதன் கீழ் உங்கள் பணம் சுமார் 10 வருடங்கள் மற்றும் ஒரு மாதத்தில் இரட்டிப்பாகும். இதற்கு வரி விலக்கும் உண்டென்பதால் கூடுதல் சிறப்புடைய சிறுசேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் (National Savings Certificates (NSC))

இந்த திட்டத்தில் வட்டி ஆண்டுதோறும் 7.7 சதவிகிதத்தில் கிடைக்கும், இதில் முதலீடு செய்த 5 மாதங்களுக்குப் பிறகு சுமார் 10 வருடங்களுக்கு பணம் இரட்டிப்பாகும். கையிலிருக்கும் பணத்தை பாதுகாப்பான வழியில் முதலீடு செய்ய ஏற்றதாக இந்த திட்டம் இருக்கும். இதில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம்.

Post Office Savings Scheme in Tamil

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் | Kisan Vikas Patra Scheme

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆண்டுதோறும் 7.5 சதவீத வட்டி கிடைக்கும். இந்த தபால் அலுவலக திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், உங்கள் பணத்தை 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாக்கலாம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (Sukanya Samriddhi Accounts)

பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதம் 8 சதவீதம் ஆகும். இதில் குறைந்தபட்சம் தொகையாக ரூ.250 கணக்கை தொடங்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தொடங்கலாம். சிறுமிக்கு 18 வயது ஆனதும், அவர் அதற்கு உரிமையாளராவார். இந்தக் கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் திறக்கலாம்.

Post Office Savings Scheme in Tamil

SSY கணக்கை எந்த வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் தொடங்கலாம். மேலும் அதனைப் பிற வங்கி கிளைகள் அல்லது தபால் நிலையங்களுக்கு எளிதாக மாற்றலாம். இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் முதிர்வு காலம் 21 ஆண்டுகள்.

டெபாசிட் செய்பவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம், ரூ.50-இன் மடங்குகளில். ஒரு மொத்த தொகை அல்லது ஒரு மாத அடிப்படையில் செலுத்தலாம். இருப்பினும், குறைந்தபட்ச தொகையை பராமரிக்கவில்லை என்றால், 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், மேலும் கணக்கு தவறியதாக கருதப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ரூ. 250 + ரூ. 50 செலுத்துவதன் மூலம், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் முடிவதற்குள், அவ்வாறு தவறிய கணக்கை புதுப்பிக்க முடியும்.

Post Office Savings Scheme in Tamil

‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ (ponmagan scheme)

ஆண் குழந்தைகளுக்காக தபால் நிலையங்களில் இருக்கும் சேமிப்புத் திட்டம்தான் ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ (ponmagan scheme)ஆகும். பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ போலவே வருடம் ஒன்றுக்கு 12 முறை என குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய்வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தியா முழுவதும் உள்ள எந்த தபால் நிலையங்களிலும் இதனை தொடங்கிக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு குழந்தைகளின் வயது 10க்கு மேல் இருந்தால், அவர்களின் பெயரிலேயே திட்டத்தை தொடங்கிக்கொள்ளலாம். அதேசமயம் குழந்தைக்கு 10 வயதுக்கு கீழ் இருந்தால் ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் தொடங்கலாம்.

இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு, குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி சான்றாக ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.

Updated On: 30 Nov 2023 10:47 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்