/* */

ஆண்களின் விதைப்பையில் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது? சிகிச்சை முறை என்ன..? தெரிஞ்சுக்கங்க..!

Prostate Tamil Meaning-புரோஸ்டேட் எனப்படும் விதைப்பையில் புற்று ஏன் ஏற்படுகிறது? எப்படி தடுக்கலாம் என்பதை பார்ப்போம் வாங்க.

HIGHLIGHTS

ஆண்களின் விதைப்பையில் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது? சிகிச்சை முறை என்ன..? தெரிஞ்சுக்கங்க..!
X

prostate means in tamil-விதைப்பை புற்று (கோப்பு படம்)

Prostate Tamil Meaning-புரோஸ்டேட் என்பது ஆண்களின் சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய வால்நட் வடிவ சுரப்பி ஆகும். இது விதைப்பை என்று அழைக்கப்படுகிறது. இந்த விதைப்பை சுரப்பியானது விந்தணுக்களை ஊட்டமளிக்கும். மேலும் உயிர் உற்பத்திக்காரணியான விந்து திரவத்தை உற்பத்திச் செய்கிறது. புரோஸ்டேட் புற்றுநோய் என்பது புற்றுநோயின் பொதுவான வடிவங்களில் ஒன்றாக உள்ளது.


விதைப்பை புற்றுநோய் என்று சொல்லகூடிய புரோஸ்டேட் புற்றுநோயானது முன்பு வயதான ஆண்களை மட்டுமே பாதித்து வந்தது. ஆனால், தற்போது 40 வயதை கடந்த ஆண்களுக்கும் இந்த பாதிப்பு வருவது மருத்துவத் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பொதுவாகவே ஆண்கள் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொள்ளும் போது இந்த விதைப்பை புற்று குறித்தும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 40வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இந்த பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் தொடக்கநிலையிலேயே சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பினை பெற முடியும்.

விதைப்பை புற்று நோய் குறித்து விரிவாக பார்ப்போம் வாங்க.


​புரோஸ்டேட் என்பது என்ன?

புரோஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் விதைப்பை எனப்படும் ஒரு சுரப்பி ஆகும். இது வால்நட் வடிவத்தில் இருக்கும். இது விந்து சுரக்க உதவுகிறது. ஆண்களுக்கு வயதாகும் போது இந்த சுரப்பும் குறையக் கூடும். இது சீராக குறைபாடில்லாமல் நடக்கும் போது பிரச்னையில்லை. இந்த சுரப்பியில் தான் புரோஸ்டேட் பிரச்னை ஏற்படுகிறது.

விதைப்பை சுரப்பியில் இரண்டு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. முதல் வகையானது விதைப்பை வீக்கம். இதனால் சிறுநீர் வெளியேறுவதில் தடங்கல், அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது. அவசரமாக வெளியேறுவது போன்ற உணர்வு உண்டாகும். சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடமுடியும். இரண்டாம் வகையானது புரோஸ்டேட் புற்றுநோய்.

புரோஸ்டேட் புற்றுநோய்(விதைப்பை புற்று)

புரோஸ்டேட் புற்றுநோய் பொதுவான வகைகளில் ஒன்றாகும். இது மெதுவாக வளர்ந்து புரோஸ்டேட் சுரப்பியில் கட்டுப்படுத்தப்படுகிறது. இது அந்த சுரப்பியில் இருக்கும் வரை தீங்கு ஏற்படுத்தாது. ஆனால் சில வகையான புரோஸ்டேட் புற்றுநோய் மெதுவாக வளர்ந்து மற்ற இடங்களுக்கும் பரவக்கூடும்.


தொடக்கத்திலேயே கண்டறிந்தால் சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். இந்த புற்றுநோயின் தொடக்கநிலை அடினோகார்சினொ எனப்படுகிறது. இந்த புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும்.

விதைப்பை புற்றுநோய் அறிகுறிகள்

விதைப்பை புற்றுநோயின் தொடக்கத்தில் எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டாது. ஆனால், படிப்படியாகத் தான் அறிகுறிகள் தென்படும்.

சிறுநீர் கழிப்பதில் சிக்கல், சிறுநீர் குறைந்து ரத்தம் வெளிப்படுதல், எடை குறைதல், எலும்புவலி, விறைப்புத்தன்மை, சிறுநீர் அவசரமாக வெளியேறுவது போன்றவை வரும். இந்த காலகட்டத்தில் மருத்துவரை சந்தித்து ஆலோசனைப்பெற்று சிகிச்சை பெறவேண்டும்.

இதற்கு அடுத்த நிலையில் தீவிர நமைச்சல் , சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படலாம்.

விதைப்பை புற்றுநோய் சுரப்பிக்கு வெளியே இருந்தால் முதுகு, இடுப்பு, தொடைகள், தோள்கள் எலும்புகளில் வலி, கால்களில் வீக்கம், சோர்வு, குடல் இயக்கங்களில் மாற்றம் போன்றவை அறிகுறிகள் காணப்படும்.


சிறுநீர் பிரச்னை

ஆண்களின் சிறுநீர்ப்பைக்கும் அது வெளியேறும் குழாய்க்கும் நடுவில் தான் விதைப்பை அமைந்துள்ளது. சிறுநீர் வெளியேறும் போது அது விதைப்பை சுரப்பி வழியாகத் தான் வெளியேறும். விதைப்பை சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் போது சிறுநீர் குழாய் அழுத்தப்படும். அதனால் சிறுநீர் வெளியேறாமல் அங்கேயே நின்றுவிடும். அதோடு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும்.

தானே வெளியேறும் சிறுநீர்

சில சமயங்களில் விதைப்பை புற்று இருப்பவர்களுக்கு சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறிவிடும். சிறுநீர் வெளியேறும் பாதையில் தொற்றும் எரிச்சலும் உண்டாகும். அதனால் இந்த அறிகுறிகளை அலட்சியப் படுத்தக்கூடாது. உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

அதே நேரம் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் இந்த அறிகுறிகளால் மட்டுமே அது விதைப்பை பிரச்சனைகள் வந்தாலே அது விதைப்பை புற்றுநோய் என்று முடிவுக்கு வந்து அதுகுறித்து பயப்பட வேண்டாம். மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்வதே பாதுகாப்பானது.

விதைப்பை புற்றுநோய் ஏற்பட காரணங்கள்

விதைப்பை புற்று வருவதற்கு சரியான காரணங்கள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. விதைப்பை செல்கள் அவற்றின் டி.என்.ஏ- வில் மாற்றங்களை உருவாக்குவதால் இந்த புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகலாம் என்று தெரிகிறது.

விதைப்பை சுரப்பியில் செல்கள் இறந்த பிறகும் வெளியேறாமல் அசாதாரணமாக அங்கேயே வாழ்கின்றது. அப்பபோது அது அருகிலுள்ள திசுக்களை ஆக்ரமித்து கட்டியை உருவாக்குகிறது. நாளடைவில் இந்த செல்கள் உடல் உறுப்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.

இந்த பாதிப்பு எந்த வயதிலும் யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். மேலும் இதற்கு டெஸ்டோஸ்டிரான் என்னும் ஆண் ஹார்மோனும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

விதைப்பை புற்று பரிசோதனை மற்றும் சிகிச்சை

மேற்கூறப்பட்டுள்ள அறிகுறிகளை உணர்ந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும். அவர்கள் விதைப்பை புற்றுநோய்க்கான சோதனைகளை மேற்கொள்வார்கள். தொடக்கநிலையில் பிஎஸ்ஏ எனப்படும் எளிமையான இரத்தப்பரிசோதனை மூலம் இதை கண்டறிந்துவிடலாம்.

இந்த முதல் கட்ட பரிசோதனையில் நோயின் தீவிரம் கண்டறியப்படாவிட்டால் அடுத்து டிஆர்இ என்னும் பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனையில் விதைப்பை சுரப்பி பரிசோதிக்கப்படும்.


அதை தொடர்ந்து விதைப்பை சுரப்பியில் புற்றுநோய் வீரியத்தை கண்டறிய பயாப்ஸி பரிசோதனையும் செய்யப்படும். இதில் உறுதியான பிறகு விதைப்பை புற்று சுரப்பியின் உள்ளே உள்ளதா அல்லது அதை தாண்டி வெளியே வந்து இருக்கிறதா என்பதை எம் ஆர் ஐ பரிசோதனை மூலம் கண்டறிவார்கள். மேலும் இது உடலில் வேறு எங்கேனு பரவி உள்ளதா என்பதையும் கண்டறிவார்கள்.

இது எலும்புக்கும் பரவக்கூடும் என்பதால் எலும்பை ஸ்கேன் செய்தும் பார்ப்பார்கள். அதோடு அது வயிற்றுப்பகுதியில் பரவி இருக்கலாம் என்பதால் அது குறித்து அறிந்து கொள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வார்கள். நவீன மருத்துவத்தில் பிஎஸ்எம்ஏ -பிஇடி ஸ்கேன் செய்து கண்டறியப்படுகிறது.

சிகிச்சை

புற்றுநோயின் நிலையைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, ஹார்மோன் தெரபி என தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். முறையான மருத்துவப் பரிசோதனை சரியான நேரத்தில் செய்துகொள்வதன் மூலம் இதை தடுத்துவிட முடியும்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 April 2024 10:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  4. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  5. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  6. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  7. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  8. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  9. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?