/* */

mental tiredness mostly affected teenagers மன இறுக்கத்தால் சோர்ந்து போகும் பருவம் எது தெரியுமா?.....டீன் ஏஜ் பருவந்தாங்க,,,,

mental tiredness mostly affected teenagers மனஇறுக்கம் என்பது உளவியல் சார்ந்தது. உளச்சோர்வு காரணமாக ஏற்படுவது. இதற்கு பல வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிறது.அதனைப் பின்பற்றுங்க....மனஇறுக்கம் தளர்ந்துவிடும்....படிச்சு பாருங்க..

HIGHLIGHTS

mental tiredness mostly affected  teenagers  மன இறுக்கத்தால் சோர்ந்து போகும் பருவம்  எது தெரியுமா?.....டீன் ஏஜ் பருவந்தாங்க,,,,
X

மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும்..... (கோப்பு படம்)

mental tiredness mostly affected teenagers

உளச்சோர்வு நோய்களிலேயே மிகக் கடுமையானது உளவில் உளச்சோர்வுதான். இது ஒரு வகையான மன இறுக்கத்தைச் சேர்ந்தது. இவர்களிடம்அடிப்படையான சில குறைகள் வெளிப்படையாகத் தென்படும். சக மனிதர்கள் மீது வெறுப்பு .மற்றவர்களினால் கைவிடப்பட்டு விட்டோமா என்ற மனநிலை. இதனால் பிரச்னைகளில் இருந்து விடுபட உயிரை மாய்த்துக்கொள்வதுதான் ஒரே வழி என்ற எண்ணம் எழும். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த எண்ணத்தில் இருந்துவிடுபட்டு சகஜ நிலைக்கு வந்தவர்கள் போல் காணப்படுவார்கள்.

உளவியல் உளச்சோர்வு பத்தில்ஒருவருக்குஇருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் லட்சத்தில் நுாறு பேரைத்தான் அதிக தாக்குதலுக்கு உட்படுத்தும் என்ற கணக்கும் கூறப்படுகிறது. அந்த நுாறு பேரில் ஒருவராக நாம் இருக்கக்கூடாது என்றால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிகையாக இருக்க வேண்டும். உடனே டாக்டரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

mental tiredness mostly affected teenagers


அறிகுறிகள்

நம்பிக்கைக்கு உரியவர்களே கைவிடப்பட்ட உணர்வு அடிக்கடி எழுதல். மனதை ஒருமுகப்படுத்த முடியாமை, சின்னச்சின்ன விஷயங்களில் கூட தீர்மானம் எடுக்க முடியாமை. சுற்றியிருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப்பழக முடியாத நிலை, பொழுது போக்குகளில் ஆர்வமின்மை யாரோடும் ஒத்துப்போகாமல் எதையும் எதிர்க்கும் மனப்பான்மை. அமைதியின்மை, எரிந்துவிழுதல், பசியின்மை, பாலியலில் ஈடுபாடு இன்மை, அடிக்கடி தலையில் பாரம் குறிக்கோள் இழந்த உணர்வு வாழ்க்கையின் பொருளற்ற உணர்வு, சிலருக்கு குற்ற உணர்வு என்று பல அறிகுறிகள் தென்படும். இவற்றில்சிலவற்றை வெளிப்படையாகக் காண இயலாது. பாதிக்கப்பட்டவர்கள் வாய்திறந்து சொன்னால்தான் தெரியும்.

mental tiredness mostly affected teenagers


உளவியல் உளச்சோர்வின் கொடூரத்தன்மை என்னவென்றால் நோயாளிகள் தங்களிடம் காணப்படும் அசாதாரண அறிகுறிகளும்,நடத்தை மாற்றங்களும் , மற்ற நோய்களைப் போல், குணப்படுத்த முடியாதது என்று தவறாகப் புரிந்து கொள்வதுதான். குழப்பமான மனநிலையில் தங்களைப் பார்த்து மற்றவர்கள் ஏளனமாக நினைக்கக்கூடும் என்ற உணர்வில்தான் பலர் தற்கொலை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் உளவியல் உளச்சோர்வு நோய்க்கான அறிகுறிகள் எதுவாக இருந்தாலும் அவை முற்றிலும் குணப்படுத்தக்கூடியதே என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கின்றனர். மூளையின் உள்ளே செலட்டோனிக் என்ற ரசாயனப் பொருளின் மாற்றத்திற்குத்தக்கவாறுதான் உளச்சோர்வு மனிதனைத் தாக்குகிறது. அந்த ரசாயனத்தைச் சமநிலையில் வைத்திருக்கக்கூடிய மருந்துகள், சிகிச்சைகள், இப்போது எல்லா நாடுகளிலுமே கிடைக்கின்றன. கூடிய மட்டிலும் சில பயிற்சிகளை நாள்தோறும் கடைப்பிடித்து வந்தால் உளவியல் உளச்சோர்வு நோய் நம்மை அண்டாது பாதுகாக்க முடியும் அவற்றில் சில.

mental tiredness mostly affected teenagers


உடற்பயிற்சிகள்

காலையில் எழுந்ததும் பூனையானது தன் உடம்பையும் மற்ற உறுப்புகளையும் நீட்டி சோம்பல் முறித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இதேபோல் நாமும் உடலை நீட்டிப் பயிற்சி செய்தால் மூட்டுகளிலும் தசைகளிலும் உள்ள விரைப்புகள் நீங்கி, மூளைக்கு நிறைய ரத்தம்பாயும். சுறுசுறுப்பு தானாக வரும். இது தவிர ஸ்கிப்பிங், ஓடுதல், அதிகாலை நடைப்பயிற்சி, ஆகியவை அவசியம். ஜூரண சக்தியை அதிகரிக்கச் செய்து ரத்தத்தைச் சீராக ஓட வைக்க இந்த உடற்பயிற்சிகளே போதுமானதாகும்.

யோகா, தியானம்

ஒருவருக்குப் போதிய நேரமும் விருப்பமும் இருந்து யோகா செய்தால் போதும். மனஇறுக்கம் அருகில் வரவே வராது. ஏனென்றால் உள்ளத்தையும், உடலையும் ஒருங்கே இணையச் செய்வது யோகப்பயிற்சி மட்டுமே.அதேபோல் குளித்து முடித்தவுடன் கண்களை மூடிக்கொண்டு மனதில் வரும் எந்தப்பொருளின் மீதும் மனதைச் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் மனதியானம் செய்வதால் மனதிற்குப் புத்துணர்ச்சியும் சிந்தனைத் தெளிவும் கிட்டும்.

mental tiredness mostly affected teenagers



உணவில் கட்டுப்பாடு

ஒருவருடைய எடை அவருடைய வயதிற்கும் உயரத்திற்கும் ஏற்றவாறு வைத்திருந்தாலே பல நோய்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டவராகவே இருப்பார். எடை அதிகரிப்பும், உடல் பருமனும்தான் உளவியல் உளச்சோர்வு நோய்க்கு மன இறுக்கத்திற்கு ஆரம்ப கால நுழைவு வாயில்கள் நோய் தாக்கிய பின்னர் உடல் இளைத்து விடும் என்பது வேறு விஷயம். அதற்குக் கட்டுப்பாடான உணவுதான் சிறந்த சிகிச்சை . காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சோ்க்க வேண்டும்.அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொண்டு, நெய்,பாலாடைகள், ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சமச்சீர் உணவு முறையைப் பின்பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டும்.

புகை, மது கூடாது

புகை பிடிப்பதால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். அதானல் உளவியல் உளச்சோர்வு நோய்கள் அதிகம் வர வாய்ப்புகள்அதிகம். இந்நோய் தாக்கப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி பல விபரீத முடிவுகளை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் இரண்டுமே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

நிம்மதியான துாக்கம்

நீங்கள் துாங்கி எழுந்தவுடன் புத்துணர்வையும், சுறுசுறுப்பும் பெற வேண்டும். இல்லையென்றால் நீங்கள் நல்ல மனநிலையில் என்று பொருள். ஒரு நாளைக்கு 6மணி நேரமாவது நல்ல துாக்கத்திலிருக்க வேண்டியது மி க மிக அவசியம் ஆகும். களைத்துப் போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல துாக்கத்தால்தான் புத்துணர்ச்சியைப் பெற முடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப் போவதை வழக்கமாக்கிகொள் ளவேண்டும்.

வேலையில் அக்கறை

செய்யும் வேலையில் அதிக அக்கறை எடுத்து ஒரு மனதுடன் செயல்பட்டால் உளச்சோர்வுக்கு இடமே இருக்காது. வேலை நேரத்தினைத் திட்டமிடத் தெரியாதது. அளவுக்கு அதிகமான வேலைப் பளுவை இழுத்துப்போட்டுக்கொள்வது , மன அழுத்தச்சூழலில் தொடர்ந்து வேலையைச் செய்தல் ஆகியவை உளச்சோர்வைத் துாண்டக்கூடியவை. இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

mental tiredness mostly affected teenagers


போட்டி மனப்பான்மையைத் தவிர்த்தல்

தேவையற்ற முறையற்ற பேராசையையுட்ம போட்டியையும் தவிர்க்க வேண்டும். போட்டி மனப்பான்மை வளர வளர மனம் பலவீனப்படுத்துவதோடு எப்போதும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சச்சரவுகளையுமே சந்திக்க வேண்டி வரும். இவைதான் பலருக்கு உளச்சோர்வு நோய் வரக் காரணம்.

இரட்டை வேடம் போடுவது எதார்த்தத்தை மறைத்துவைத்துக்கொண்டு வெளி்யில் நடிப்பது இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.மனம் திறந்து பேசி நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்வதுதான் இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட வழி.

சமுதாயத்தோடு ஒத்துப்போதல்

நல்ல சமூக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் இரு தரப்பிலும் நல்ல துணையை தோழமையை உருவாக்கும் உறவுகளுடன் சேர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்வது, இசை, பாட்டு, என்று கேட்பதும், கற்றுக்கொள்வதும், ஆகியன சமூக உறவோடு கலக்க உதவும்.

உளவியல் உளச்சோர்வு அளவிற்கு அதிகமாக இருக்கும்போது நரம்பு மண்டலம் சிதைந்துவரும் . அச்சம், சோர்வு, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமை என்று தோன்றி பல விபரீதச் செயலுக்கு இட்டுச் செல்லும். அதனால் மேலேசொன்ன அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒரு நல்ல டாக்டரிடம் சென்று உடலையும் மனதையும் முழு செக் அப் செய்து கொள்வது பல வழிகளிலும் உதவக்கூடும்.

Updated On: 8 Aug 2023 12:27 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?