/* */

வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகன் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தி் வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர்  திருடிய தந்தை மகன் கைது
X

கைது செய்யப்பட்ட தந்தை மகன்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையம் அருகே பள்ளி தலைமையாசிரியர் ஒருவரின் ஜந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த சிவசங்கர் மற்றும் சிவா ஆகிய தந்தை மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுபடி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கோட்டார் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார், தலைமை காவலர் விஜயகுமார்,சிபு ரீகன்,சிவக்குமார்,மற்றும் கிருஷ்ண பிரசாத் ஆகியோர்கள் இன்று குற்றவாளிகள் தந்தை மகன் இருவரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து தங்கசங்கிலியை போலீசார் முதலில் பறிமுதல் செய்தனர் மேலும் வடிவேலு பட பாணியில் வடசேரி மற்றும் ராஜாக்கமங்கலம் பகுதியில் வீடுகளில் இருந்த எல்.இ.டி டிவி,ஹோம் தியேட்டர்,வெண்கல குத்துவிளக்கு,பானை,கேஸ் சிலிண்டர் ஆகிய பொருட்களையும் அவர்கள் திருடியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் தந்தை மகன் ஆகிய இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 24 April 2024 8:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’