/* */

தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்

தமிழகத்தில், கொரோனா 3-வது அலை வராது என்று கூற இயலாது என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து?  சுகாதாரத்துறை செயலாளர் பகீர்
X

ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்று, 6ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முகாம் குறித்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இன்று, 6ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 1.40 கோடி முதியவர்களில், இதுவரை 47 லட்சம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

இவர்களில், 2-வது தவணை தடுப்பூசியை, 22 லட்சம் முதியவர்கள் மட்டுமே போட்டுக் கொண்டுள்ளனர். கொரோனா பரவலில், இறப்பு விகிதம் அதிகமுள்ளவர்களாக முதியோர் உள்ள நிலையில், அவர்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது சரியல்ல.

இதுவரை தமிழகத்தில் கொரோனா 3-வது அலைக்கான அறிகுறிகள் எதுவுமில்லை. அறிகுறிகள் இல்லை என்றாலும் தமிழகத்திற்கு கொரோனா 3-வது அலை வராது என்று கூறிவிட முடியாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில், தற்போது கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 23 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!