/* */

மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை

மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
X

அகான்ஷா மோகன்.

மும்பையில் தமிழ் நடிகை ஒருவர் வேலையில்லாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தியாவின் பொருளாதார தலைநகரம் மும்பையின் அந்தேரி வர்சோவா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார் மாடல் அழகி அகான்ஷா மோகன். 30 வயதான இவர் நேற்று முன்தினம் இரவு அந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இரவில் சாப்பாடு ஆர்டர் செய்து அவர் சாப்பிட்டு இருக்கிறார். அதன் பின்னர் காலையில் அவர் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படாததால் ஹோட்டல் ஊழியர்கள் வரை கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வர்சோவா போலீசார் அங்கு வந்து ஹோட்டல் ஊழியர்கள் கொடுத்த மாற்று சாவி மூலம் அறை கதவை திறந்து பார்த்தனர். உள்ளே பார்த்தால் அகான்ஷா மோகன் மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அகான்ஷா மோகனின் உடலை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.


அதில் என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை நான் மகிழ்ச்சியாக இல்லை. மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுக்கிறேன். நான் அமைதியை விரும்புகிறேன். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். போலீசார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் அகான்ஷா மோகன் கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளாகி அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். வர்சோவா போலீசார் இந்த சம்பவம் குறித்து ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அகான்ஷா மோகன் மும்பையில் பிரபல மாடல் அழகி ஆவார். உலகையே புரட்டி போட்ட கொரோனாவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் ஏராளமானவர்கள் பலியானார்கள். அது மட்டுமல்லாமல் நன்கு வளர்ந்த நிலையில் பெரும் லாபத்தில் இயங்கி வந்த பல தொழில் நிறுவனங்கள் கூட நஷ்டம் அடைந்தன. பல நபர்களுக்கு வேலை கொடுத்த முதலாளிகள் தங்களது நிறுவனத்தை மூடிவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிறு சிறு வியாபாரங்கள் தொழில் நடத்தி வந்தவர்கள் வாட்ச்மேன் வேலைக்கும் செக்யூரிட்டி வேலைக்கும் சென்றார்கள். அதேபோன்று சினிமா துறை மற்றும் மாடல் துறையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. கொரோனாவின் தாக்கத்திற்கு மாடல் தொழிலும் தப்பவில்லை மும்பையில் பிரபல மாடல் அழகியாக வலம் வந்த அகான்ஷா மோகனுக்கு மாடல் தொழில் வாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டது‌ அவருக்கு மாடல் அழகியாக ஒப்பந்தம் செய்த பல நிறுவனங்கள் அந்த ஆர்டரை கேன்சல் செய்து விட்டன.

இதன் காரணமாக அவர் வறுமையில் வாடினார் தொழிலில் மூலம் கிடைத்த வருமானம் நின்று விட்டதால் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தடுமாறினார். இதன் காரணமாகவே அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அகான்ஷா மோகன் மாடல் அழகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 9 திருடர்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான சில படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் தற்போது தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Oct 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...