மறைந்த பாடகர் குறித்து, மேடையில் உருக்கமாக பேசிய ஏ.ஆர் ரஹ்மான்
AR Rahman,Singer Bamba Bakiya -சமீபத்தில் பங்கேற்ற விழா மேடை ஒன்றில், மண்ணை விட்டு மறைந்த பாடகர் பம்பா பாக்யா குறித்து, உருக்கமாக பேசியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.
HIGHLIGHTS
AR Rahman,Singer Bamba Bakiyaஇயக்குநர் மணிரத்னம் இயக்கிய, 'பொன்னியின் செல்வன்' ஆடியோ, டிரெய்லர் லாஞ்ச் விழா சமீபத்தில் நடந்தது. திரைப்பட நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் கலந்து கொண்டார்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்ற, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான, 'பொன்னிநதி' பாடலை பாடிய ஏ.ஆர் ரஹ்மான், அந்த பாடலை பாடிய பாடகர், ' பம்பா பாக்யா'வை பற்றி பேசினார்.
சமீபத்தில் மறைந்த அவரை பற்றி உருக்கமாக பேசிய ரஹ்மான், அவரை 'மிஸ்' பண்ணுவதாக குறிப்பிட்டதோடு, 'அவர் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்,' என்றும் எமோஷனலாக பேசி, தன்னுடைய பீலிங்ஸ்சை வெளிப்படுத்தினார். அதோடு, 'பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அருமையாக பாடல் எழுதி இருக்கிறார். அவர் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்' எனவும் அவரையும் பாராட்டி அறிமுகப்படுத்தி உள்ளார்.