Begin typing your search above and press return to search.
பெண்கள் பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்
நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாகாணம் கதுனாவில் இகாபி என்ற நகரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.
அதன்பின், அவர்கள் பெண்கள் உட்பட 30 மாணவர்களையும், பள்ளிக்கூடஊழியர்கள்,சிலரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜம்பாரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து 279 மாணவிகள் கடத்தப்பட்டதும், அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்