Begin typing your search above and press return to search.
வேலூர் சத்துவாச்சாரியில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
வேலூர் சத்துவாச்சாரியில் கால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் பெய்த மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி.
HIGHLIGHTS
வேலூர் சத்துவாச்சாரியில் கோர்ட்டுக்கும் ஆவின் பால் அலுவலகத்திற்கும் இடைப்பட்ட 4-வது தெரு பள்ளமாக உள்ளது. தெருவின் இரு பக்கமும் கால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் பெய்த மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட முடியாமல், வாகன போக்குவரத்திற்கு பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.