/* */

டாஸ்மாக் கடையில் கையாடல்: சூபர்வைசர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்

வேலூரில் டாஸ்மாக் கடையில் ரூபாய் 1 கோடி கையாடல் செய்த சூபர்வைசர் உள்பட 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

டாஸ்மாக் கடையில் கையாடல்: சூபர்வைசர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
X

மாதிரி படம்

வேலூர் டாஸ்மாக் கடையில் ரூபாய் 1 கோடி கையாடல் செய்யப்பட்டதாக வந்த புகாரின்பேரில் சூபர்வைசர் உட்பட 4 பேர் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் உயர் ரக மதுபாட்டில்களை எலைட் எனப்படும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகிறது. இங்கு வார இறுதி நாட்களில் எப்போதும் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதேபோன்று வேலூர் காகிதப்பட்டறையில் எலைட் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இங்கு பணிபுரியும் ஊழியர்கள் இந்த கடையில் ரூபாய் 1 கோடி வரை கையாடல் செய்ததாக புகார் கூறப்பட்டது. அதன்பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று டாஸ்மாக் சூபர்வைசர் பிரகாஷ் மற்றும் ஊழியர்களான சண்முகம், பாலாஜி, விஜயகுமார் ஆகிய 4 பேரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர் .

இவர்களில் பிரகாஷ் என்பவர் அதிமுக மாணவரணி நிர்வாகியாக உள்ளார்.

Updated On: 18 Aug 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்