Begin typing your search above and press return to search.
நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் லைசன்ஸ் ரத்து
நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசன்ஸ் தானாகவே ரத்து ஆகி விடும் என போலீசார் எச்சரிக்கை
HIGHLIGHTS
வேலூரில் எப்போதும் வாகன நெரிசல் ஏற்படுவதற்கு காரணம் நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதே என தெரியவந்தது. இதையடுத்து வேலூர் போக்குவரத்து காவல்துறை இன்று முதல் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர்
இது குறித்து வேலூர் ஏ.எஸ்.பி., கூறுகையில், வேலுாரில் நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை அபராதம் செலுத்தினால் 4வது முறை தானாகவே அவர்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து ஆகி விடும். அபராதம் செலுத்தும் விவரம் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. என்று கூறினார்.
இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.