/* */

வேலூரில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

வேலூரில்  வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி
X

வேலூரில் கூடுதல் வாக்கு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி துவங்கியது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1783 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 2140 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2140 கட்டுப்பாட்டு கருவிகள், 2296 விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குடோனில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கூடுதலாக கொண்டு வரப்பட்ட 100 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 150 விவிபேட் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது. இந்த இயந்திரங்களில் முதற்கட்ட சரிபார்ப்பு பணியினை அனைத்து கட்சி பிரமுகர்கள் மத்தியில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் முன்னிலையில் இன்று தொடங்கியது. இந்த இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி முடிந்த பின்னர் தேவைபடும் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 March 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்