/* */

கயிற்றை தாண்டினால் வாகனங்கள் பறிமுதல் வேலூரில் டிராபிக்ஜாமை குறைக்க ஆய்வு

வேலூரில் போக்குவரத்தை குறைக்க போலீசார் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். எல்லைக் கயிற்றை தாண்டி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினர்.

HIGHLIGHTS

கயிற்றை தாண்டினால் வாகனங்கள் பறிமுதல் வேலூரில்  டிராபிக்ஜாமை  குறைக்க ஆய்வு
X

பைல் படம்

வேலூர் மாநகர் பகுதிகளில் தினமும் தீராத பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல் . சாலையின் கட்டமைப்பு தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப மேம்படுத்தப்படவில்லை . இதனால் மாநகரில் ஏதாவது வாகனங்கள் பழுதாகி நின்றால் , கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் .

அந்தளவிற்கு குறுகிய சாலைகளாக உள்ளது . அதோடு சாலையோரங்களில் நோ - பார்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதினாலும் , சாலையோரங்கள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது .

எனவே மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எஸ்பி செல்வகுமார் உத்தரவின் பேரில் , ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் வேலூர் கிரீன் சர்க்கிள் முதல் பாகாயம் வரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு செய்து வருகின்றனர் .

அதேசமயம் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது . இதில் , சாலையோரங்களை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகளவில் கருத்து தெரிவித்திருந்தனர் .

அதேபோல் கனரக வாகனங்கள் மாநகரில் நுழைவதை தடுத்து , மாநகருக்கு வெளிப்புற சாலைகளில் இயக்கவும் , முக்கிய சிக்னல்களில் சிகப்பு விளக்குகள் எரியும் நேரத்தை 40 வினாடிகளில் இருந்து 20 வினாடியாக குறைத்து இயக்குவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது .

இது குறித்து ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் கூறுகையில் , வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது . ஓரிரு நாட்களில் போக்குவரத்து சோதனை முறையில் மாற்றம் செய்யப்படும் .

வேலூர் சாரதி மாளிகை பகுதியில் அண்ணா சாலையில் கார்கள் நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும் . அங்குள்ள கயிற்றை தாண்டி வாகனங்கள் நிறுத்தினால் அதனையும் பறிமுதல் செய்யப்படும் , என்றார் .

Updated On: 21 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு