/* */

சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்பி ஆய்வு

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆய்வுசெய்தார்

HIGHLIGHTS

சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்பி ஆய்வு
X

சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டபோது

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா கடந்த 30-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வருகிற 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், 15-ம் தேதி சிரசு திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தார்.

சிரசு திருவிழாவின் போது அம்மன் சிரசு புறப்படும் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் இருந்து சிரசு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையை அதிகாரிகளுடன் நடந்து சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசிக்கவும், தரிசித்த பின் வெளியே வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது பயிற்சி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, காவல் ஆய்வாளர்கள் லட்சுமி, சீனிவாசன், பாலசுப்பிரமணியம், முத்துக்குமார், ரஜினிகாந்த், முகேஷ்குமார், சுந்தரமூர்த்தி, கோவில் நிர்வாக அலுவலர் டி.திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கெங்கையம்மன் தேரோட்டம், சிரசு திருவிழா மற்றும் பூப்பல்லக்கு ஆகிய விழாவிற்காக காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கெங்கையம்மன் திருவிழாவின் போது பல வருடங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் 1,500 காவலர்கள், 200 ஊர்க் காவல் படையினர் என 1,700 பேர் ஈடுபடுவார்கள். பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் திருவிழாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு பக்தர்கள் சிரமம் இன்றி பாதுகாப்பாக அம்மனை தரிசித்து செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிகளுக்காக நகரின் பல இடங்களிலும் கோவிலிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். மேலும் ட்ரோன் கேமராக்கள் மூலமும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

திருவிழா காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். திருவிழாக்கு வருபவர்களின் வாகனங்கள் சிரமம் இன்றி நிறுத்துவதற்கும் வாகன நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்

Updated On: 10 May 2023 4:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...