/* */

உடுமலை கிளை நூலகத்தில் நூலக வார விழா துவக்கம்

உடுமலை கிளை நூலகத்தில், நூலக வார விழா துவங்கியது.

HIGHLIGHTS

உடுமலை கிளை நூலகத்தில் நூலக  வார விழா துவக்கம்
X

உடுமலை கிளை நூலகத்தில் வாசகர் வட்ட விழா துவங்கியது. 

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கிளை நுாலகம் எண் 2ல், நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய நுாலக வார விழா, பாரதியார் நுாற்றாண்டு விழா துவங்கியது. வாசகர் வட்ட துணை தலைவர் சிவக்குமார், தலைமை வகித்தார். முன்னதாக, நூலகர் கணேசன், வரவேற்றார். பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி நுாலகர் சுப்பிரமணியன், வாசிப்பின் அவசியம், புத்தகம் படிக்கும் முறை குறித்து பேசினார்.

இதையடுத்து, பொதுமக்கள் பார்வைக்கு, புதிய நூல்களை உள்ளடக்கிய கண்காட்சியும் துவக்கப்பட்டது. வரும், 21ம் தேதி வரை, தினமும், நூல்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டது. விழாவில், பேராசிரியர் கண்டிமுத்து, வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார், சிலம்பம் பயிற்சியாளர் வீரமணி, ஆசிரியர் விஜயலட்சுமி, அரசு மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...