/* */

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 8 தேர்வு; 922 பேர் 'ஆப்சென்ட்'

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 812 பேர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 8 தேர்வு எழுதினர்.

HIGHLIGHTS

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 8 தேர்வு; 922 பேர் ஆப்சென்ட்
X

திருப்பூர் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 8 தேர்வு நடந்தது.

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று, குரூப்-8 தேர்வில் கிரேடு-4 செயல் அலுவலர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பிஷப் உபகாரசாமி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட 7 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

மொத்தம் 1,734 பேர் தேர்வு எழுதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 922 பேர் தேர்வு எழுத வரவில்லை. 812 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். இதன்படி 46.83 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.

மாவட்ட கல்வித்துறை சார்பில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்வையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 12 Sep 2022 5:55 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  5. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  6. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  9. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  10. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...