Begin typing your search above and press return to search.
திருப்பூரில் குறையாத கொரோனா: 1823 பேருக்கு பாதிப்பு ; 12 பேர் பலி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் பலியாகி உள்ளனர்.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகம் இன்னமும் குறைந்தபாடியில்லை. எனவே, மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அமைச்சர் சாமிநாதன் மற்றும் கலெக்டர் விஜய்கார்த்திகேயன் ஆகியோர் அறிவுரையின் பேரில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. மாநில சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று திருப்பூர் மாவட்டத்தில் 1823, பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு 12,பேர் பலியாகி உள்ளனர்.
மாவட்டம் முழுவதும்56, ஆயிரத்து 354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 39, ஆயிரத்து35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 16 , ஆயிரத்து 894 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 425, ஆகும்.