Begin typing your search above and press return to search.
திருப்பூரில் இருசக்கரவாகனம் திருடியவர் கைது
திருப்பூர் பாப்பநாய்க்கன்பாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த உதயகுமாரை 32, என்பதும் பாப்பநாய்க்கன்பாளையத்தில் இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.