/* */

பெண் குழந்தையிடம் சில்மிஷம்; பனியன் தொழிலாளி கைது

திருப்பூரில், பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பனியன் தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெண் குழந்தையிடம் சில்மிஷம்; பனியன் தொழிலாளி கைது
X

திருப்பூரில், குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பனியன் தொழிலாளி கைது.

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 வயது பெண் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர், அந்த குழந்தையிடம் நைசாக பேசி, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை கண்ட குழந்தையின் தாய் கூச்சல் போட்டதும், அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அந்த நபரை பிடித்து, திருப்பூர் கொங்குநகர் சரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த சகுபர் சாதிக் என்பதும், அவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்வதும் தெரிய வந்தது. மேலும் 3 வயது பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சகுபர் சாதிக்கை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 Sep 2022 5:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!