/* */

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது.

HIGHLIGHTS

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து  பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்
X

விசைத்தறி.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. பின்னலாடை நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக பின்னலாடை நிறுவனத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை உயர்ந்து வருகிறது. சமீபத்தில் 30 ரூபாய் உயர்ந்து 350 க்கு விற்கப்படுகிறது. நூல் விலை உயர்வால் பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் நூல் விலை குறையாமல் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 2 நாள் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தது.

அதன்படி, திருப்பூரில் உற்பத்தி நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது. இந்த போராட்டம் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On: 17 Jan 2022 12:27 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்