/* */

நிறுத்தப்பட்ட 108 சேவை... முத்தூரில் மீண்டும் துவக்கம்

திருப்பூர் மாவட்டம் முத்தூரில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நிறுத்தப்பட்ட 108 சேவை... முத்தூரில் மீண்டும் துவக்கம்
X

திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி, கடந்த 2017 ஆம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த சேவை, கடந்த மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. சேவை நிறுத்தப்பட்டதால், 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளக்கோவில், 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காங்கயம் பகுதியில் இருந்துதான் 108 வர வேண்டிய நிலை இருந்தது.

இதனால் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செல்லும்போது சில நேரத்தில் உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்தது. சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், தமிழக அமைச்சர் சாமிநாதனிடம் கடந்த 20 ம் தேதி கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையின் அடிப்படையில், முத்தூரில் 108 சேவையை துவங்க, சுகாதார துறையினருக்கு கலெக்டர் விஜய்கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில், முத்தூரில் 108 சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Updated On: 28 May 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?