/* */

தக்காளி லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி திருட்டு

தாராபுரத்தில், தக்காளி பெட்டியுடன் லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த, 25 ஆயிரம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டது.

HIGHLIGHTS

தக்காளி லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி திருட்டு
X

பைல் படம்.

தாராபுரம் பழைய கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (33). இவர் தினசரி தாராபுரம் பகுதியில் உள்ள தோட்டங்களில் விளையும் தக்காளியை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி, தாராபுரம் மற்றும் சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனது மினி ஆட்டோ வாகனம் மூலம் கொண்டு சென்று அங்குள்ள மளிகைக் கடைகளுக்கு தக்காளி விற்பனை செய்து வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு, அலங்கியம் பகுதியில் இருந்து தக்காளி ஏற்றி வந்தவர், மினி ஆட்டோவை தனது வீட்டருகே நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அப்போது அதில், 15 கிலோ எடை கொண்ட 42 பெட்டிகள் இருந்தன. இந்நிலையில், நடராஜன் காலையில் விற்பனைக்காக ஆட்டோவை எடுத்துச்செல்ல வந்தபோது ஆட்டோவில் இருந்த தக்காளி அடைக்கப்பட்ட, 21 பெட்டி திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. தாராபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Updated On: 29 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  3. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  4. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  5. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  6. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  7. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  8. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  9. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  10. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...