/* */

இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு தாராபுரம் தாசில்தாரிடம் மனு

Tirupur News-இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட ராம் நகா் பகுதி மக்கள், தாராபுரம் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு தாராபுரம் தாசில்தாரிடம் மனு
X

Tirupur News- தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில், இலவச வீட்டுமனை கேட்டு மக்கள் மனு அளித்தனர்( கோப்பு படம்- தாசில்தார் அலுவலகம் முகப்பு)

Tirupur News,Tirupur News Today-ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமியிடம், கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட ராம் நகா் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம், கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அம்மாபட்டி, பனங்காடு, மாருதி நகா் ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலங்கள் உள்ளன.

இந்த புறம்போக்கு நிலங்களை நிலபுலங்கள் உள்ளிட்ட வசதி உள்ளவா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். ஆகவே, மேற்படி நிலங்களை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்டு, கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட ராம் நகா் பகுதியில் வசித்து வரும் சொந்த வீடு இல்லாத ஏழைமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Nov 2023 10:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...