/* */

மத்திய அரசுக்கு திருப்பூர் மீது அக்கறை இல்லையா? - பார்லிமெண்டில் எம்.பி சுப்பராயன் கேள்வி

மத்திய அரசுக்கு திருப்பூர் மீது அக்கறை இல்லையா? என, டெல்லி பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய திருப்பூர் எம்.பி சுப்பராயன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ, வைரலாகி வலைதளங்களில் வருகிறது.

HIGHLIGHTS

மத்திய அரசுக்கு திருப்பூர் மீது அக்கறை இல்லையா? - பார்லிமெண்டில் எம்.பி சுப்பராயன் கேள்வி
X

டெல்லி பார்லிமெண்டில் பேசிய எம்.பி சுப்பராயன்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த நூல்மில்கள் சாயமிடுதல், பிளீச்சிங், எம்ப்ராய்டரி துறை உள்ளிட்ட உப தொழில்கள் மூலம் ஏறக்குறைய 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா பாதிப்பு, ரஷ்ய- உக்ரைன் போர், நூல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்துறை கடும் சரிவை சந்தித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து போதிய ஆர்டர்கள் கிடைக்காததால் பல நிறுவனங்களும் மூடப்பட்டு வேலையின்றி தொழிலாளர்கள் உள்ளனர்.

இதன் காரணமாக, திருப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் வீடுகள் வாடகைக்கு விடப்படும், குடோன் வாடகைக்கு விடப்படும், ஸ்டிச்சிங் யூனிட்கள் வாடகைக்கு விடப்படும் என்ற பலகைகள் தொங்கி கொண்டிருப்பதை காண முடிகிறது.மேலும் வேலை இழந்த பல தொழிலாளர்கள் வேறு வேறு வேலைகளுக்கு செல்லவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திருப்பூர் தொழில் துறையின் இன்றைய நிலை குறித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை குறித்தும் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மிக கடுமையாக கண்டித்து, ஆவேசமாக பேசியுள்ளார்.

பார்லிமென்டில் அவர் பேசியதாவது,

மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை காரணமாக இந்தியாவில் 92 சதவீத வேலை வாய்ப்பை அளித்து வரும் எம்.எஸ்.எம்.இ செக்டார் இன்று சிறுக சிறுக அழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு, எனது தொகுதியான திருப்பூர் பின்னலாடை துறையே உதாரணமாகும்.

இங்கு 30 சதவீதம் மத்திய அரசின் பொருளாதார கொள்கையின் தீய விளைவால் சாகடிக்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள 70 சதவீதம் தத்தி தத்தி திக்கற்ற நெருக்கடியில் உள்ளது. இதற்கு காரணமான கொள்கைகளை மாற்ற வேண்டும். மேலும், உலகில் உள்ள 5 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் பின்னலாடையை உற்பத்தி செய்து அனுப்பும் நிலையில் இருந்த திருப்பூரில், இங்கு உற்பத்தி செய்யும் அதே டீ சர்ட்டை பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்கிறது மத்திய அரசு. இது மிகவும் புரிந்து கொள்ளாத தன்மை, உள்நாட்டு நிலையை சரியாக மதிப்பீடு செய்யாமல் வெளிநாட்டு டீ சர்ட்டை இறக்குமதி செய்கிறது. அதுவே இங்கு உற்பத்தியாவதுதான்.

திருப்பூரை காப்பாற்ற வேண்டுமானால், பல்லாயிரம் கோடி பாரீன் எக்ஸ்சேஞ்ச் ஈட்டி தரும் நகருக்கு, அதில் குறிப்பிட்ட சதவீதம் எடுத்து திருப்பூர் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தமிழகம் மட்டுமின்றி வட இந்தியா முழுவதுமிருந்து பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நகராக திருப்பூர் உள்ளது.

இந்த திருப்பூரை காக்க மத்திய அரசு கடமைப் பட்டிருக்கிறதா? இல்லையா? மத்திய அரசுக்கு திருப்பூர் மீது அக்கறை இருக்கிறதா?இல்லையா? பெரு விகிதமாக வேலை தருகிற திருப்பூரை காப்பாற்ற வேண்டும் என கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை என்பதை அவர்களின் நடைமுறை அனுபவம் உணர்த்துகிறது.

திருப்பூரில் சாலைகள் முழுமையாக இல்லை. திருப்பூர் உட்கட்டமைப்பை மேம்படுத்த உடனடியாக ரூ.250 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். ஜிஎஸ்டி நிதி தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டியது வழங்கப்படவில்லை. மாறாக தான் அதிகாரம் செலுத்தும் மாநிலத்துக்கு அதிக உதவியும், தன்னை எதிர்க்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பழிவாங்கும் வகையில் குறைந்த நிதியும் ஒதுக்குவது தர்மமல்ல. எனவே தமிழ்நாட்டின் தேவையை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

பார்லிமென்டில் திருப்பூர் எம்பி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Updated On: 19 Dec 2022 7:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  2. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  3. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  4. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  7. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  9. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  10. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?