/* */

திருப்பூரில் 110படுக்கையுடன் கொரோனா வார்டு: முதல்வர் துவக்கிவைத்தார்

திருப்பூரில் 110 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா வார்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருப்பூரில் 110படுக்கையுடன் கொரோனா  வார்டு: முதல்வர் துவக்கிவைத்தார்
X

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் பயன்பெற 110 ஆக்சிஜன்யுடன் கூடிய கொரோனா வார்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவியது. குறி்ப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பரவலும், இறப்பும் நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, கொரோனா கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா நிலைபாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களமிறங்கி ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை ஈரோட்டில் ஆய்வு செய்த பிறகு, திருப்பூர் மாவட்டத்தில், குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் வசியுடன் கூடிய வார்டு, 20 இன்நோவா கார் ஆம்புலன்ஸ் துவக்கி வைத்தார்.அதைத்தொடர்ந்து 6, டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், சாமிநாதன், கயல்விழி, முத்துசாமி, கலெக்டர் விஜய்கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 May 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...