/* */

கருவலுார் மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்

அவினாசி அருகே கருவலுார் மாரியம்மன் கோவில் தேரோட்டம், விமரிசையாக நடந்தது.

HIGHLIGHTS

கருவலுார் மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்
X

கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே கருவலுாரிலுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, 8ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. 19ல் கொடியேற்றம் நடத்தப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று துவங்கியது.

காலை, 6:00 மணிக்கு தங்க காப்பு அலங்காரத்தில் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4:30 மணிக்கு பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். நுாற்றுக்கணக்கான மத்தியில், திருத்தேர் அசைந்தாடி வந்தது. தேர், முதல் நிலையை அடைந்ததும், பக்தர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இன்றும் தேரோட்டம் நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறுவர், சிறுமியர் விளையாட, விளையாட்டு உபகரணங்கள் என, கருவலுார் பகுதி விழாக்கோலம் பூண்டிடிருந்தது. உள்ளூர் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பிற இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.

இன்று மாலை, திருத்தேர், நிலை வந்து சேரும். நாளை, இரவு, 10:00 மணிக்கு தெப்ப உற்சவமும், காமதேனு வாகனத்தில் எழுந்தருள் நிகழ்வும், தொடர்ந்து, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவேட்டை நடக்கிறது. 27ம் தேதி, மகா தரிசனம், மஞ்சள் நீராடல், கொடி இறக்கம் ஆகியவை நடக்கிறது. வரும், 30ம் தேதி, மறுபூஜை, பாலாபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்கள், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Updated On: 24 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது