/* */

திருப்பூர் மாவட்ட தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

திருப்பூர் மாவட்டத்தில், அவினாசி பகுதி தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
X

அவினாசி தேவாலயத்தில், புனிதவெள்ளியை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு, மரித்த நாளை நினைவு கூறும் வகையில், நேற்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள், கடந்த, 40 நாட்களாக அனுசரித்த தவக்காலத்தின், முக்கியமான நாளாக, இது கருதப்படுகிறது. நேற்று, காலை முதல் சர்ச்களில் வழிபாடு, ஆராதனை நடத்தப்பட்டது.

ஏசுவின் சிலுவைப்பாடுகள் மூலம், உணர வேண்டிய வாழ்க்கை தத்துவம் குறித்து, பைபிளில் உள்ள கருத்தை மையமாக வைத்து, பாதிரியார்கள், நற்செய்தியாளர்கள் போதித்தனர். பக்தர்கள், காலை முதல் உணவருந்தாமல், உபவாசத்துடன் வழிபாடுகளில் பங்கேற்றனர். மாலை, 3:00 மணிக்கு சர்ச்களில், சிலுவை பாதை ஆராதனை நடத்தப்பட்டது.

அவினாசி புனித தோமையார் தேவலாயம், சேவூர் லுார்துபுரம் புனித லுார்து அன்னை தேவாலயம், பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., தேவாலயங்களில், புனித வெள்ளி வழிபாடு நடத்தப்பட்டது. நாளை ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

Updated On: 16 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு