/* */

அவிநாசியில் தொடரும் மழை: ஆற்றோர மக்கள் கண்காணிப்பு

தொடர் மழை பெய்து வரும் நிலையில், நல்லாறு ஓட்டியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அவிநாசியில் தொடரும் மழை: ஆற்றோர மக்கள் கண்காணிப்பு
X

அவினாசியில் உள்ள நல்லாறு.

திருப்பூர் மாவட்டத்தில், பல ஆண்டுக்கு பின் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதில், அவினாசி பகுதியில் அதிகளவு மழை பெய்து வருகிறது. நீர்நிலையோரமுள்ள குடியிருப்புகளின் மீது வருவாய்த்துறையினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

நல்லாற்றை ஒட்டி, ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பெய்த பெரு மழையில், அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அதன் பிறகு தான், அங்குள்ள ஓடை ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

அன்னுார், கருவலுார் உள்ளிட்ட இடங்களில் பெருமழை பெய்யும் போது நல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. அத்தகைய வெள்ள அபாயத்தின் போது, அங்குள்ள மக்களை, பேரூராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், அரசு பள்ளிகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என வருவாய்த்துறையினர் கூறினர்.

Updated On: 3 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு