/* */

வசூல் வேட்டை..? பெருமாநல்லூர் செளமியா மருத்துவமனைக்கு அனுமதி ரத்து..!

பெருமாநல்லூரில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததால், சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

HIGHLIGHTS

வசூல் வேட்டை..? பெருமாநல்லூர் செளமியா மருத்துவமனைக்கு அனுமதி ரத்து..!
X

பெருமாநல்லூரில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.19 லட்சம் கட்டணம் வசூலித்ததாகத் தனியார் மருத்துவமனை மீது அளிக்கப்பட்ட புகார் உறுதி செய்யப்பட்டதால், அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று ரத்து செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (62). இவருக்கு கடந்த. மே மாதம் 3 ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு,

ஒரு ரெம்டெசிவிர் மருந்து விலை ரூ.40 ஆயிரம் என , 5 ரெம்டெசிவிர் மருந்துக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

21 நாள் சிகிச்சைக்கு பிறகு, ஆக்சிஜன் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி, சுப்பிரமணியனை அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரை வேறு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் மாற்றிய நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி 25 ம் தேதி இறந்தார்.

இதற்கிடையில், முதலில் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை தரப்பில் ரசீது எதுவும் தராமல், ரூ.19 லட்சத்து 5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக, சுப்பிரமணியத்தின் மகன்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக மருத்துவமனை விளக்கம் அளிக்க மாவட்ட சுகாதார இணை இயக்குநர் உத்தரவிட்டார். மேலும் புகாரின் அடிப்படையிலும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படியும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாவட்ட இணை இயக்குநர் தலைமையில் பாக்கியலட்சுமி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக பெருமாநல்லூர் செளமியா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On: 4 Jun 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?