Begin typing your search above and press return to search.
ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ஆம்பூர், வாணியம்பாடியில் பொது முடக்க உத்தரவை மீறி சுற்றித்திரிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பொது முடக்கத்தை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றுவோர் மீது அபராதம் விதித்தல் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இன்று டிஎஸ்பி பழனி செல்வம் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட பொது முடக்கத்தை மீறி வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி வெளியில் வரக் கூடிய நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன