/* */

வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

நிலத்தை அளவிட பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா.

HIGHLIGHTS

வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
X

வாணியம்பாடி அருகே நிலத்தை அளவிட பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியை சேர்ந்தவர் ஜோதி அவரது மனைவி லட்சுமி இவர்களுக்கு 3 பிள்ளைகள் ரீட்டா, ரோசி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தந்தை ஜோதி மற்றும் தாய் லட்சுமி ஆகியோர் உயிரிழந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து தரவேண்டி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ரீட்டா மற்றும் அவரது அண்ணன் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குடும்பத்தினருடன் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டத்தை கைவிட்டனர் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து பிரித்து தருவதாக அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு ரீட்டா மற்றும் அவரது குடும்பத்தினர் கலைந்து சென்றனர்.

Updated On: 26 Aug 2021 12:32 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்