Begin typing your search above and press return to search.
மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
HIGHLIGHTS
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு குறைத்தும் மாநில அரசு விலை குறைப்பை நடைமுறைபடுத்தாததை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் பாஜக மனித சங்கிலி போராட்டம் நடத்தியது.
போராட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்