/* */

திமுகவில் இரு கோஷ்டிகளுக்கிடையே தகராறு: ஆரம்பமானது உள்ளாட்சி பஞ்சாயத்து

ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்காக திமுகவில் இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் போலீசார் லேசான தடியடி நடத்தினர்

HIGHLIGHTS

திமுகவில் இரு கோஷ்டிகளுக்கிடையே தகராறு: ஆரம்பமானது உள்ளாட்சி பஞ்சாயத்து
X

திமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18 பேர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் மொத்தம் 18 ஒன்றிய குழு உறுப்பினர்களில் 11 திமுகவும், 4 அதிமுக, 2 பாமக, 1 சுயேட்சை உட்பட 18 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் இன்று ஆலங்காயம் ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பதவி விழா முடிந்து வெளியில் வந்த போது ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்ற திமுக கட்சியினரிடையே இரு கோஷ்டியினரிடையில் வெற்றி பெற்ற பதவி ஏற்றுக்கொண்ட கவுன்சிலர்கள் அழைத்துச்செல்ல திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ். அவருடைய மருமகள் காயத்ரி பிரபாகரன் மற்றும் ஆலங்காயம் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் பாரி சங்கீதா ஆகிய இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இரு கோஷ்டியினரும் ஒன்றிய கவுன்சிலர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியப்போது கைகலப்பாக மாறியது. இதனால், போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இருந்தபோதிலும் பாரி சங்கீதா அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களை காரில் ஏற்றிச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 20 Oct 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’