Begin typing your search above and press return to search.
தமிழக அரசை கண்டித்து வாயில் கருப்புதுணி கட்டி கொண்டு பாஜக ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
சமூக ஊடகங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு எதிராக கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக கூறி பாஜக தொண்டர்கள் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுனர்.
வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வாசுதேவன் மற்றும் வேலூர் ஒருங்கிணைத்த மாவட்ட பார்வையாளர் கொ.வெங்கடேசன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுனர்.