Begin typing your search above and press return to search.
திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கிவைத்தார்
திருப்பத்தூர் அருகே குரிசிலாப்பட்டு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கிவைத்தார்
HIGHLIGHTS
குரிசிலாப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செல்லுத்தும் சிறப்பு முகாமை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
கிராமப்பகுதிகளில் அதிக அளவில் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில் தற்பொழுது அந்தந்த பகுதிகளில் தடுப்பூசி போடுவதால் ஆர்வத்துடன் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் திருப்பதி, வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தர்யா, மோகன்குமார், வெங்கடேசன், மேகநாதன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தார்கள்.