Begin typing your search above and press return to search.
திருப்பத்தூரில் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்
திருப்பத்தூரில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்
HIGHLIGHTS
கொரானா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பூம் பூம் மாட்டுக்காரர்கள் அன்றாட கூலி வேலை இல்லாமல் தன்னுடைய பிழைப்புக்கு தேவையான பொருட்கள் மற்றும் பொருளுதவி இல்லாமலும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்
இதனை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு எண்ணெய், உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் காய்கறிகளையும் வழங்கினார்.
இதை பெற்றுக்கொண்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் காவல்துறை கண்காணிப்பாளரை இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தனர்.