/* */

இருசக்கர வாகனம்- லாரி மோதி விபத்து பெண் பலி ஒருவர் படுகாயம்

இருசக்கர வாகனம்- லாரி மோதி விபத்து பெண் பலி ஒருவர் படுகாயம்
X

வாணியம்பாடி அருகே உழவர் சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் காய்கறி ஏற்றி வந்தவர்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செக்குமேடு பகுதியை சேர்ந்த பவுனு மற்றும் ராஜகுமாரி ஆகியோர் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனைக்கு செய்து விட்டு பின்னர் அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது வாணியம்பாடி - ஆலங்காயம் செல்லும் சாலையில் நேதாஜி நகர் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது பின்புறமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் பவுன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பவுன் உயிரிழந்தார். மேலும் அவரது உறவினரான ராஜ்குமாரி படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனர் விஜய் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 Dec 2020 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்