/* */

டீக்கடை அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

நெல்லை அருகே டீக்கடை அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

டீக்கடை அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
X

நெல்லை அடுத்துள்ள தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (41), என்பவர் ராஜவல்லிபுரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த 26ம் தேதி அன்று இரவு முருகேசன் டீ கடையில் இருக்கும் போது ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த, இசக்கிமுத்து (21), மாயாண்டி(20) ஆகிய இருவரும் அவர்களின் கூட்டாளிகளுடன் பைக்கில் முருகேசனின் டீக்கடை முன்பு நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

முருகேசன் வளர்க்கும் நாய் அவர்களை பார்த்து குறைத்துள்ளது, இதனால் கோபமடைந்த எதிரிகள் முருகேசனை அவதூறாக பேசி நாளை எப்படி நீ டீ கடை நடத்துகிறாய் என பார்ப்போம் என மிரட்டல் விடுத்து சென்றனர்.

பின் அன்று இரவு 11 மணி அளவில் எதிரிகள் முருகேசன் டீ கடைக்கு வந்து டீ கடையை கம்பால் சேதப்படுத்தியும் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். தகவலறிந்து வந்த முருகேசனை மேலும் நீ எங்களை எதிர்த்து பேசினால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முருகேசன் தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் செல்லதங்கம் விசாரணை மேற்கொண்டு கடையை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த மாயாண்டி மற்றும் இசக்கிமுத்துவை கைது செய்தார்.

Updated On: 28 April 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!