திருநெல்வேலியில் மின்தடை! கரண்ட் எப்ப போகும்? எப்ப திரும்பி வரும்?
திருநெல்வேலியில் மின்தடை! கரண்ட் எப்ப போகும்? எப்ப திரும்பி வரும்?
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் மின்தடை மாலை 5 மணிக்குதான் திரும்பி வரும் என்கிறார்கள்.
வரும் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மேலப்பாளையம் பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட டவுன், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் திருநெல்வேலி நகர்ப்புற விநியோக பிரிவு பொறியாளர் மின் தடை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை ஆகஸ்ட் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், டவுன், எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை,டவுன் கீழரதவீதி போஸ் மார்கெட், ஏபி மாடதெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு,மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில் தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான்குடியிருப்பு பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நெல்லை மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.