Begin typing your search above and press return to search.
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
நெல்லையில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
HIGHLIGHTS
கடந்த 2018-ம் ஆண்டு இராமையன்பட்டியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் விக்னேஷ்(24), என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு விக்னேஷை கைது செய்தனர்.
இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 04.05.2022 இன்று வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி குற்றவாளி விக்னேஷ் என்பவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.