பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி உலக சாதனை
வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி 36 வினாடியில் 100 பழங்களின் பெயரையும், 1 நிமிடத்தில் 21 திருக்குறளையும் சொல்லி உலக சாதனை.
HIGHLIGHTS
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி உலக சாதனை.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி உலக சாதனை படைத்துள்ளார். புனேயில் உள்ள யூ.எஸ்.ஆர்ட் எம்போரியம் உலக அளவில் சூப்பர் டேலன்ட் கிட்ஸ் என்ற விருதை வழங்கியது. இவ்விருதை வேல்ஸ் பள்ளி எல்.கே.ஜி மாணவி தௌலத் இஸ்ரா (வயது 4) வென்று உலக சாதனை படைத்தார். 36வினாடியில் 100 பழங்களின் பெயரைச் சொல்லியும், 1 நிமிடத்தில் 21 திருக்குறளையும் சொல்லி உலக அளவில் சாதனை படைத்தார்.
சாதனை படைத்த மாணவியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் சந்தோஷ்குமார் ஆகியோர் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். இச்சிறுவயதிலேயே விருதினை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை பள்ளி தாளாளர் செந்தில்பிரகாஷ், இயக்குநர் திலகவதி, பள்ளி முதல்வர் சுகந்தி சொர்ணலதா மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் பாராட்டினர்கள்.