/* */

ஆபரேஷன் கஞ்சா 2.0 தீவிர சாேதனை: நெல்லையில் 19 பேர் கைது

நெல்லை மாநகரத்தில் ஆபரேஷன் கஞ்சா 2.0 வில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆபரேஷன் கஞ்சா 2.0 தீவிர சாேதனை: நெல்லையில் 19 பேர் கைது
X

நெல்லை மாநகரத்தில் ஆபரேஷன் கஞ்சா 2.0 வில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 10 கிலாே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மாநகரத்தில் ஆபரேஷன் கஞ்சா 2.0 வில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் மூன்று நாட்களில் 19 பேர் கைது. 10 கிலோ 200 கிராம் கஞ்சா, ஒரு நான்கு சக்கர வாகனம், மூன்று 2 சக்கர வாகனம் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற பெயரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாநகரத்தில் கடந்த 28ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 19 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 10 கிலோ 210 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம், முன்று இரண்டு சக்கர வாகனம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பேட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், சுத்தமல்லி பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி, பேட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் சத்யா, நகர் பகுதியைச் சேர்ந்த கூடலிங்கம் மற்றும் இசக்கிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் டவுன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சபரிஸ்ரீகண்ணன் மற்றும் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சையத் அலி மற்றும் சேக் முகமது, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சங்கரநாராயணன், ராமராஜன், செல்வகுமார், பெரியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அய்யப்பன் என்பவரும், பெருமாள்புரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராமராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மொத்தமாக இவர்களிடம் இருந்து 10 கிலோ 210 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 31 March 2022 3:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...