/* */

கொண்டாநகரம் அருகே கொலை

நெல்லை மாவட்டம்

HIGHLIGHTS

கொண்டாநகரம் அருகே கொலை
X

நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் அருகே டாஸ்மார் பார் உரிமையாளரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பேட்டை மயிலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்ற கருத்தப்பாண்டி (54) இவர் கொண்டாநகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பார் எடுத்து நடத்தி வருகிறார் . அதன் அருகிலேயே கோழி , ஆடுகள் வளர்த்து வந்துள்ளார்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேட்டை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் மீது கணேசன் ஆடு திருடப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

இதுகுறித்த விசாரணை நடந்து வரும் நிலையில் . பார் அமைந்துள்ள பகுதியிலேயே ஆடு, கோழிகள் வளர்ப்பதால் இரவு நேரத்தில் கணேசன் அங்கு சென்று தங்குவது வழக்கம் இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பாரில் தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர் .

இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி. பிரதீப் , சுத்தமல்லி காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .

பின்னர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . ஆடு திருடப்பட்டதாக புகார் கொடுத்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா என சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் , கொலையாளிகளையும் தேடிவருகின்றனர் . கொண்டாநகரம் பகுதியல் காலையில் நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Updated On: 12 May 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!