Begin typing your search above and press return to search.
குடிக்க பணம் கேட்டு நடுரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது
தச்சநல்லூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்ட நபர் கைது.
HIGHLIGHTS
நெல்லையை அடுத்துள்ள தச்சநல்லூரில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்ட நபர் கைது.
நெல்லை மாநகரம் தச்சநல்லூர்- மதுரை சாலையில் உலகம்மன் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்ற தச்சநல்லூர் வாழவந்த அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (33) மற்றும் அவருடைய நண்பர் பாரதி சக்தி ஆகிய இருவரை தச்சநல்லூர் உருடையார் குடியிருப்பைச் சேர்ந்த ராம் சூர்யா என்ற ரன் (21) என்பவர் வழிமறித்து மது அருந்த ரூபாய் 500 பணம் கேட்டு கத்தியால் மிரட்டியதாக பாஸ்கர் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தார்.